Posts

Showing posts from July, 2018
ஆஷாட நவராத்திரி By கலாவாணிதாசன் SRK IYER ஆஷாட நவராத்திரி ஆஷாட மாதம் ஆரம்பிக்கும்பொழுது துவங்குகின்றது. அதாவது சந்திரனின் சுழற்சியை அடிப்படையாக வைத்து துவங்கும் மாதமான ஆஷாட மாதத்தின் முதல்நாளில் இந்த நவராத்திரி துவங்குகின்றது. இன்னும் சொல்லப்போனால் ஆனி மாத அமாவாசைக்கு மறுநாளிலிருந்து இந்த நவராத்திரி ஆரம்பிக்கின்றது. இந்த நவராத்திரியை வாராஹி நவராத்திரி அன்று அழைப்பர். எங்கும் நிறைந்த மகாசக்தியாம் அந்த பராசக்தியின் ஒரு அம்சமாக விளங்கும் அன்னை வாராஹி அம்மனை வழிபடும் முகமாக இந்த நவராத்திரி அமைந்துள்ளது. வாராஹி அன்னையின் கையில் ஏர் கலப்பை உள்ளது. இந்த வாராஹி தேவதை பூமி மற்றும் அந்த பூமியிலிருந்து விளையும் கிழங்கு மற்றும் பயிர் வகைகளை குறிக்கும் தேவதை என்பதை உணர்த்திட அன்னை வாராஹியின் கையில் ஏர் கலப்பை உள்ளது என்று மகான்கள் கூறியுள்ளார்கள். அதாவது இந்த மாதத்திலிருந்து வான் மழை வலம் வரும் காலம். வான் மழை பயிர்கள் செழிப்பாக வளர ஒரு முக்கிய காரணமாகும். இந்த ஆஷாட மாதம் என்று சொல்லப்படுகின்ற ஆடி மாதத்தில்தான் நெல் வயல்களை உழுது விதையிட்டு நாற்று நட்டு பயிர் விளைச்சலை ஆ...