Posts

  அஜபா யோகம் By கலாவாணிதாசன் SRK IYER உளவியல் ஆலோசகர்     யோகம் என்ற வடமொழி சொல்லுக்கு இணைதல் அல்லது ஒன்று படுதல் என்று பொருள் கொள்ளப்படும். ஒன்றுபடுதல் என்று சொன்னால் ஒரு பொருளையோ அல்லது   ஒரு ஒலியையோ நினைத்து அந்த எண்ணத்துடன் இணைதல் என்று நாம் பொருள் கொள்ளலாம். அஜபா என்றால் ஜபமற்றது என்று பொருள். ஜபம் அல்லது தியானம் என்றால் ஒரு பொருளையோ அல்லது ஒரு மந்திரத்திலோ நாம் மிகவும் ஆழ்ந்து அந்த பொருளிலோ அல்லது ஒலியிலோ நம்மை நாமே ஒன்றுபடுத்திக் கொள்ளுதல் ஜபம் எனப்படும். ஜபமில்லாதது என்றால் எப்படி? ஏதேனும் ஒரு பொருளில்தானே மனம் செல்ல முடியும். அப்படி மனம் செல்லும்பொழுதுதானே அது ஜபமாக முடியும். அப்படி இல்லாமல் ஜபமற்றது என்றால் என்ன? ஜபமற்றது என்றால் சதா சர்வ காலமும் ஜபத்திலேயே இருப்பதினால் அது இல்லாதது ஆகிறது என்று நாம் புரிந்து கொள்ளலாம். அதாவது ஜபம் இடைவிடாது நடை பெறுகிறது என்று புரிந்து கொண்டால் அதுவே அஜபை ஆகிறது என்று புரிந்து கொள்லலாம். எனது பூஜ்ய ஸ்ரீ பரமேஷ்டி குருநாதர் அவர்கள் எழுதிய “அஜபா கல்பம்” என்கிற புத்தகத்தின் முன்னுரையில் அஜபா என்றால் என்...
VAK DEVATAS By कलावाणिदासन् SRK IYER In the Srividya Upasana tradition, performing the ritual of Devi Navavarana puja is considered as an important ritual. In performing this navavarana puja, the various avarna devatas are worshipped in a systematic manner comprising in nine avarnas. The subject matter for discussion in this article, is the worship of vak devatas, who are eight in number, and occupy the seventh avarna in   the navavarna puja. The LalitaSahasranama is one of the important stotra for the Srividya upasaka.   A Srividya Upasaka is expected to recite this Lalita Sahasranama everyday as a nitya karma, a daily ritual. And this Lalita Sahasranama is recited by the Vak Devatas, who are none other than Devi   herself and who has manifested in eight forms for the benefit of mankind. Devi is   vak sakthi.    In Srividya Geetha, t he Goddess Sakthi appeared   as Sabda Rupini in the Akasa in an answer to the propit...
கற்றுத்தரும் குரு An article by SRK IYER எந்த ஒரு பாடத்தையோ அல்லது தொழிலையோ அல்லது ஒரு கலையையோ கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அந்த பாடத்தையோ அல்லது தொழிலையோ அல்லது அந்த கலையையோ கற்றுத்தர ஒரு குரு வேண்டும். அந்த குருவை நாம் ஆசான், ஆசிரியர், ஆச்சார்யர் என்று பல பெயர்களில் அழைக்கிறோம். இதில் குரு என்கிற வார்த்தையே மிகவும் சிறந்தது.   “கு” என்கிற எழுத்திற்கு அஞ்ஞானம் அல்லது அறிவீனம் என்று பொருளுண்டு. “ரு” என்கிற எழுத்திற்கு அழிப்பவர் என்று பொருள்.   அதாவது நமது அறியாமையை போக்கி அறிவு எனும் ஒளி அமுதத்தை வழங்குபவரையே சாத்திரங்கள் குரு என்று அழைக்கின்றன. இருப்பினும் ஆசான், ஆசிரியர், என்றே பல சமயங்களில் அறிவை போதிக்கும் குரு அடையாளம் காணப்படுகிறார் என்றே நாம் புரிந்துகொள்ளலாம். குருவிற்கு பல பெயர்களை நமது சாத்திரங்கள் அடையாளப்படுத்தியுள்ளது. அவையாவன: ஸ்ரீநாதர், ஆராத்தியர், ஆசார்யர், சுவாமி, மகேஸ்வரன், தேசிகர், பட்டாரகர், தேவர், பிரபு, சம்யமீ, யோகி, அவதூதர் போன்ற பல பெயர்களில் குருவை வணங்கியிருக்கிறார்கள். அடையாளம் கண்டிருக்கிறார்கள். “குருவில்லாத வித்தை பாழ்” என...
ஆர்த்ரம் ஜ்வலதி – ஒரு சிந்தனை By கலாவாணிதாசன் SRK IYER உளவியல் ஆலோசகர் ஸ்ரீ தேவி நவாவரண பூஜையில் தத்வ சோதனம் எனும் ஒரு பகுதி உண்டு. அந்த பகுதியின் நிறைவில் “ஆர்த்ரம் ஜ்வலதி” என்கின்ற மந்திரத்தை கூறி பூஜகர் கொடுத்த விசேஷ அர்க்யத்தை ப்ரசாதமாக ஏற்று எடுத்துக்கொள்ளுவர். அந்த “ஆர்த்ரம் ஜ்வலதி” எனும் மந்த்ரம் கூறுவதாவது: “நீரில் ஒளிரும் ஒளி நானே . அந்த ஒளிர் தரும் ஒளியாக ஒளிரும் பிரம்மம் நானே. எவர் நானாக உள்ளாரோ அந்த பிரம்மம் நானே. பிரம்மமாக நானே இருக்கிறேன். நானாக நான் இருக்கிறேன். நான் நானாக இருப்பதால் என்னில் நான் என்னையே ஆஹுதியாக அளிக்கிறேன். மேற்கூறிய வகையிலே இந்த “ஆர்த்ரம் ஜ்வலதி” என்கிற மந்திரத்திற்கு மகான்கள் பொருள் கொண்டிருக்கிறார்கள். அதாவது   நான் என்பது இந்த உடலல்ல.   மனமுமல்ல என்று சொல்லுகின்ற வேதாந்த கருத்தை இந்த மந்திரம் தெளிவாக கூறுவதாக நாம் பொருள் கொள்ளலாம். இறுதியாக அமைந்துள்ள “ என்னில் நான் என்னையே ஆஹுதியாக அளிக்கிறேன்” என்கின்ற சொற்றொடர் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதுகிறோம். ஏனெனில் மனதில் ஓடும் எண்ணங்களை அப்படியே நிறு...