ஆர்த்ரம் ஜ்வலதி – ஒரு சிந்தனை
By
கலாவாணிதாசன்
SRK IYER
உளவியல் ஆலோசகர்

ஸ்ரீ தேவி நவாவரண பூஜையில் தத்வ சோதனம் எனும் ஒரு பகுதி உண்டு. அந்த பகுதியின் நிறைவில் “ஆர்த்ரம் ஜ்வலதி” என்கின்ற மந்திரத்தை கூறி பூஜகர் கொடுத்த விசேஷ அர்க்யத்தை ப்ரசாதமாக ஏற்று எடுத்துக்கொள்ளுவர்.

அந்த “ஆர்த்ரம் ஜ்வலதி” எனும் மந்த்ரம் கூறுவதாவது:

“நீரில் ஒளிரும் ஒளி நானே . அந்த ஒளிர் தரும் ஒளியாக ஒளிரும் பிரம்மம் நானே. எவர் நானாக உள்ளாரோ அந்த பிரம்மம் நானே. பிரம்மமாக நானே இருக்கிறேன். நானாக நான் இருக்கிறேன். நான் நானாக இருப்பதால் என்னில் நான் என்னையே ஆஹுதியாக அளிக்கிறேன்.

மேற்கூறிய வகையிலே இந்த “ஆர்த்ரம் ஜ்வலதி” என்கிற மந்திரத்திற்கு மகான்கள் பொருள் கொண்டிருக்கிறார்கள்.

அதாவது  நான் என்பது இந்த உடலல்ல.  மனமுமல்ல என்று சொல்லுகின்ற வேதாந்த கருத்தை இந்த மந்திரம் தெளிவாக கூறுவதாக நாம் பொருள் கொள்ளலாம்.

இறுதியாக அமைந்துள்ள “ என்னில் நான் என்னையே ஆஹுதியாக அளிக்கிறேன்” என்கின்ற சொற்றொடர் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதுகிறோம்.

ஏனெனில் மனதில் ஓடும் எண்ணங்களை அப்படியே நிறுத்தி மனதை ஒரு எண்ணமில்லா நிலைக்கு கொண்டு செல்லவேண்டும் என்கின்ற கருத்தை இந்த பகுதி கூறுவதாக புரிந்துகொள்ளலாம்.

தியானத்தின் மூலம் மனதை ஒரு நிலைபடுத்தி யோகத்தில் மனதை லயப்படுத்தவேண்டும் என்கிற கருத்தை இந்த மந்திரம் கூறுவதாக நாம் புரிந்துகொள்ளலாம்.

நான் நானாக இருக்கிறேன் என்கின்ற சொற்றொடர் மூலம் நமக்கென்ற ஒரு வாழ்க்கை உள்ளது.  நாம் மற்றவரை பார்த்து நம்முடன் ஒப்பிட்டு நம்முடைய நிம்மதியையும் சந்தோஷத்தையும் கெடுத்துக்கொள்ளக்கூடாது என்று சொல்வதாக கொள்ளலாம்.

அதாவது தியானத்தின் மூலம் மனதை நிலை நிறுத்தி எதிர்மறையான எண்ணங்களை நீக்கி ஆக்கபூர்வ எண்ணங்களை கைக்கொண்டு நமக்கென்று வரிக்கப்பட்ட பாதையில் முழுமனதோடு சென்றால் வாழ்வில் வெற்றியும்  நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்  என்று இந்த “ஆர்த்ரம் ஜ்வலதி” என்கின்ற இந்த மந்த்ரம் கூறுவதாக நாம் புரிந்துகொள்ளலாம்.


Comments

Popular posts from this blog