கடக்க முடியாதவைகளையெல்லாம் கடக்க வைப்பாள் அன்னை ஸ்ரீ கலாவாணி By கலாவாணிதாசன் SRK IYER வாழ்க்கை என்பது நீண்ட நெடிய பாதை. கரடு முரடான பாதையாக சில சமயங்களில் சிலரது வாழ்வில் அமைந்துவிடுவது உண்டு. பிரச்னைக்கு மேல் பிரச்னையாக ஏற்பட்டுவிடுவது உண்டு. சில சமயங்களில் நாம் செல்லும் பாதை மூடப்பட்டு விட்டதோ என்ற ஐயம் ஏற்பட்டுவிடுவதும் உண்டு. எந்த பக்கம் திரும்பினாலும் மூடிய கதவுகளே நம்மை வரவேற்பதைப்போல ஒரு தோற்றம் ஏற்படுவதுண்டு. நம் பிரச்னைக்கு தீர்வே கிடையாதா என்ற ஏக்கம் நமக்கு ஏற்படுவதுண்டு. ஸ்ரீ வித்யா கீதை எனும் ஒரு சிறப்பான அம்மையின் சிறப்புகளை கூறும் ஒரு நூலில் ஸ்ரீ அன்னை கலாவாணி கூறுகிறாள்: “ஏதன்மே முக்யமைஸ்வர்யம் துர்க்கடார்த்த விபாவனம்” இதன் பொருள்: நடக்க கூடாதவைகளையும் (அதாவது நடக்கவே முடியாது என்று நினைப்பவைகளையும்) நடத்தி முடிப்பதே என்னுடைய முக்கிய ஐஸ்வர்யம் என்று அன்னை ஸ்ரீ கலாவாணி கூறுகிறாள். மேற்கூறிய பாடலின் பொருளாக கொள்வது என்னவென்றால், வாழ்வில் வரும் சங்கடங்களும் அம்பிகையின் ஐஸ்வர்யம் எ...
Posts
Showing posts from September, 2018
- Get link
- X
- Other Apps
கதம்பவன வாஸினி A meditative musing By கலாவாணிதாசன் SRK IYER உளவியல் ஆலோசகர் ஸ்ரீ அம்பிகையை கதம்பவன வாஸினி என்று கூறுவார்கள். அதாவது கதம்ப வனத்தில் வசிப்பவள் என்று பொருள். கதம்ப வனம் என்பது கல்பகம், சந்தானம், ஹரிசந்தனம், மந்தாரம், பாரிஜாதம் என்று சொல்லப்படுகின்ற தெய்வீக தேவதாருக்கள் நிறைந்த வனம் என்று பொருள். அதாவது இந்த தெய்வீக மரங்கள் எல்லாம் நாம் மனதில் நினைத்ததை தரும் வல்லமை பொருந்தியது என்று கூறுவார்கள். இந்த கதம்ப வனம் என்பது மானசீக விருத்திகள் என்பதாக எனது பரமேஷ்டி குருநாதர் பூஜ்யஸ்ரீ சிதானந்தநாதர் அவர்கள் தனது ஸ்ரீவித்யா கீதை என்று நூலின் விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். அதாவது மனமும் அதில் கொள்ளுகின்ற எண்ணமுமே நமது வாழ்வை தருவது என்று பொருள் கொள்ளலாம். நாம் கொள்ளுகின்ற ஆக்கபூர்வ எண்ணங்கள் நமது வாழ்வில் வசந்தத்தையும் வளத்தையும் தரவல்லது என்று நாம் புரிந்துகொள்ளலாம். எண்ணுகின்ற எண்ணம் தொடர்ந்து எண்ணப்பட்டுக்கொண்டே இருந்தால் எண்ணப்பட்ட எண்ணம் வாழ்வில் நடப்பது திண்ணம் என்கின்ற உளவியல் கருத்தை நமது முன்னோர்கள் மிகவும் அருமையாக ஒரு உள்ள உன்னத உருவக...