धस माहाविध्या स्थुथि By कलावाणिधासन SRK IYER नमस्थे कालिकां कालरूपिणी नमस्थे थाराधीवीं ज्ञानरूपिणी नमस्थे सुन्धरीं सक्थिरूपिणी नमस्थे भुवनेसीं भुवनपरिपालिनि नमस्थे भैरवीं ज्वालरूपिणि नमस्थे वयिरचनीं ब्रह्मज्ञानरूपिणी नमस्थे धूमावथीं अजज्ञाननासिनि नमस्थे बघलामुकीं सथ्रुसंहारिणी नमस्थे माथङ्ग्कीं वाकरूपिणि नमस्थे कमलाथ्मिकां सान्थिरूपिणी एवं धेवीं दसमहाविथ्या रूपिणीं बक्थानुग्रह कारिणीं सकल सौबाक्य धायिनीं नमस्थे जकन्माथ्रीं गुरुमण्डल रूपिणीं नमस्थे नमस्थे नमस्थे कलावाणीं
Posts
Showing posts from January, 2018
- Get link
- X
- Other Apps
16.1.2018 தை அமாவாசை அன்று முகநூலில் எழுதியது. இன்று தை அமாவாசை. இன்றைய தினத்தில்தான் திருக்கடவூரில் எழுந்தருளியிருக்கும் அன்னை அபிராமி தேவி ஆவிர்பவித்து அபிராமி பட்டருக்கு அருள் புரிந்து முழுநிலவை வானில் ஒளிரச்செய்த தினம். அன்னை அபிராமி தேவியை போற்றி பக்திசுவை பொங்கும் அபிராமி அந்தாதி எனும் தெய்வீக பாமாலையை அபிராமி பட்டர் அருளிய தினம். இன்றைய தினத்தில் அன்னை அபிராமியை பணிவோம். அருள் வேண்டி பிரார்த்திப்போம் அபிராமி அன்னையே அருள்தரும் தேவியே அந்தாதி எனும் சொற்சுவையை அளிக்கவேண்டி ஆடல் புரிந்த அன்னையே பக்தனுக்கு அருள்புரிய ஆவிர்பவித்த தேவியே அன்னையே அபிராமி தேவியே சரணம் நின் திருப்பாதமே
- Get link
- X
- Other Apps
தசமஹா வித்யா ஸ்துதி எழுதியவர் கலாவாணிதாசன் SRK IYER நமஸ்தே காளிகாம் காலரூபிணி நமஸ்தே தாராதேவீம் ஞானரூபிணி நமஸ்தே சுந்தரீம் சக்திரூபிணி நமஸ்தே புவனேஸீம் புவனபரிபாலினி நமஸ்தே பைரவீம் ஜ்வாலாரூபிணி நமஸ்தே வயிரோசனீம் ப்ரஹ்மஞானரூபிணி நமஸ்தே தூமாவதீம் அக்ஞான நாசினி நமஸ்தே பகளாமுகீம் சத்ருசம்ஹாரிணி நமஸ்தே மாதங்கீம் வாக்ரூபிணி நமஸ்தே கமலாத்மிகாம் சாந்திரூபிணி ஏவம் தேவீம் தசமஹா வித்யாரூபிணீம் பக்தானுக்ரஹகாரிணீம் சகல ஸௌபாக்ய ரூபிணீம் நமஸ்தே ஜகன்மாத்ரீம் குருமண்டலரூபிணீம் நமஸ்தே நமஸ்தே நமஸ்தே கலாவாணீம்
- Get link
- X
- Other Apps
குரு ஸ்துதி ஆக்கியோன் கலாவாணிதாசன் SRK IYER 1 குருவின் திருவருளே குறைவிலா பெரும் அருளே மயக்கும் மாயைக்கு மலர்விக்கும் ஞானத்தை குறைவற தந்திடும் குன்றாத குணக்குன்றே எமையாளும் எம் இறைவா குருவே ஞான குருவே பணிகின்றேன் உம் திருப்பாதம் என்றும் பணிவேன் உம் திருப்பாதமே 2 சாஸ்திர ஒளியில் ஒளிரும் ஜோதியே சதிராடும் மாந்தருக்கு நிழலாகும் தீபமே அக்ஞான இருளை அறவே போக்கிடும் மெய்ஞான ஒளியே எனையாளும் எம் இறைவா பணிகின்றேன் உம் திருப்பாதம் என்றும் பணிவேன் உம் திருப்பாதமே 3 வேதத்தின் போதத்தை தெளிவுற போதித்த சாதிக்கவேண்டும் வாழ்விலென போதித்த தண்ணொளியே வந்த நின்ற சங்கடங்களை வென்று நிற்க செய்த எனையாளும் எம் இறைவா பணிகின்றேன் உம் திருப்பாதம் என்றும் பணிவேன் உம் திருப்பாதமே