குரு ஸ்துதி
ஆக்கியோன்
கலாவாணிதாசன்
SRK IYER
1
குருவின்
திருவருளே
குறைவிலா பெரும்
அருளே
மயக்கும்
மாயைக்கு
மலர்விக்கும்
ஞானத்தை
குறைவற தந்திடும்
குன்றாத
குணக்குன்றே
எமையாளும் எம்
இறைவா
குருவே ஞான
குருவே
பணிகின்றேன் உம்
திருப்பாதம்
என்றும் பணிவேன்
உம் திருப்பாதமே
2
சாஸ்திர ஒளியில்
ஒளிரும் ஜோதியே
சதிராடும்
மாந்தருக்கு
நிழலாகும் தீபமே
அக்ஞான இருளை
அறவே போக்கிடும்
மெய்ஞான ஒளியே
எனையாளும் எம்
இறைவா
பணிகின்றேன் உம்
திருப்பாதம்
என்றும் பணிவேன்
உம் திருப்பாதமே
3
வேதத்தின்
போதத்தை
தெளிவுற போதித்த
சாதிக்கவேண்டும்
வாழ்விலென
போதித்த
தண்ணொளியே
வந்த நின்ற
சங்கடங்களை
வென்று நிற்க
செய்த
எனையாளும் எம்
இறைவா
பணிகின்றேன் உம்
திருப்பாதம்
என்றும் பணிவேன்
உம் திருப்பாதமே
மேலும் பல கவிதைகள் எழுதவும்
ReplyDelete