குரு ஸ்துதி
ஆக்கியோன்
கலாவாணிதாசன்
SRK IYER
1
குருவின் திருவருளே
குறைவிலா பெரும் அருளே
மயக்கும் மாயைக்கு
மலர்விக்கும் ஞானத்தை
குறைவற தந்திடும்
குன்றாத குணக்குன்றே
எமையாளும் எம் இறைவா
குருவே ஞான குருவே
பணிகின்றேன் உம் திருப்பாதம்
என்றும் பணிவேன் உம் திருப்பாதமே

2
சாஸ்திர ஒளியில்
ஒளிரும் ஜோதியே
சதிராடும் மாந்தருக்கு
நிழலாகும் தீபமே
அக்ஞான இருளை
அறவே போக்கிடும்
மெய்ஞான ஒளியே
எனையாளும் எம் இறைவா
பணிகின்றேன் உம் திருப்பாதம்
என்றும் பணிவேன் உம் திருப்பாதமே

3
வேதத்தின் போதத்தை
தெளிவுற போதித்த
சாதிக்கவேண்டும் வாழ்விலென
போதித்த தண்ணொளியே
வந்த நின்ற சங்கடங்களை
வென்று நிற்க செய்த
எனையாளும் எம் இறைவா
பணிகின்றேன் உம் திருப்பாதம்
என்றும் பணிவேன் உம் திருப்பாதமே

Comments

  1. மேலும் பல கவிதைகள் எழுதவும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog