16.1.2018 தை
அமாவாசை அன்று முகநூலில் எழுதியது.
இன்று தை
அமாவாசை. இன்றைய தினத்தில்தான் திருக்கடவூரில் எழுந்தருளியிருக்கும் அன்னை அபிராமி
தேவி ஆவிர்பவித்து அபிராமி பட்டருக்கு அருள் புரிந்து முழுநிலவை வானில்
ஒளிரச்செய்த தினம்.
அன்னை அபிராமி
தேவியை போற்றி பக்திசுவை பொங்கும் அபிராமி அந்தாதி எனும் தெய்வீக பாமாலையை அபிராமி
பட்டர் அருளிய தினம்.
இன்றைய தினத்தில்
அன்னை அபிராமியை பணிவோம். அருள் வேண்டி பிரார்த்திப்போம்
அபிராமி அன்னையே
அருள்தரும்
தேவியே
அந்தாதி எனும்
சொற்சுவையை
அளிக்கவேண்டி
ஆடல் புரிந்த
அன்னையே
பக்தனுக்கு
அருள்புரிய
ஆவிர்பவித்த
தேவியே
அன்னையே அபிராமி
தேவியே
சரணம் நின்
திருப்பாதமே
Comments
Post a Comment